ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட் நடிகர் சல்மான்கானை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். அதேசமயம் சில நேரங்களில் தனது செயல்களால் ஆச்சர்யப்பட வைப்பவரும் கூட.. ஆனால் அவரைப்போல வெளிப்படையாக பேசக்கூடிய நபரை பார்ப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.. ஆம் புட்டபொம்மா பாடல் மூலம் பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டேவின் புகழ் பரவவே அதன் பயனாக தற்போது சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பைஜான் படப்பிடிப்பில் சல்மான்கானுடன் பழகிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “சில மனிதர்கள் தங்களுக்கென முகமூடி அணிந்து கொண்டே பழகுவார்கள்.. ஆனால் சல்மான் கான் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என வெளிப்படையாக பேசக்கூடியவர், சிறந்த ஆளுமை கொண்டவர்.. அவர் அவராகவே இருக்கிறார். அவரைப்போல இப்படிப்பட்ட உயரத்தில் இருக்கும் ஒரு மனிதர் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமையான விஷயம்” என புகழ்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.