மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ராவின் பங்கு என்ன என்று பாலிவுட் வட்டராங்கள் பரபரப்பாகி உள்ளன.
ராஜ் குந்த்ராவிடம் பணிபுரிந்த அரவிந்த் ஸ்ரீவத்சவா என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 90க்கு மேற்பட்ட ஆபாச படங்களை பரப்பி உள்ளதாகவும், ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.