சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வளைய வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு ஆடியவர். ஒருகட்டத்தில் பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கவே, 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான்.
இந்தநிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜ் குந்த்ரா. போலீஸ் விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே தான் இந்த வேலைகளை ராஜ் குந்த்ரா செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஷில்பாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு செய்தி பலமாக அடிபட்டது.. அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவுடன் இருக்க பிடிக்காமல் அவரது கம்பெனி அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவே அப்போது, ஒரு விளக்கம் அளித்தார்.
“நான் ஷில்பாவுடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை என அவரது தோழிகளிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. அதுதான் இப்படி அப்படி என திரிந்து, நாங்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகும் அளவுக்கு வந்துவிட்டது. உண்மையில் ஒரு டீல் விஷயமாக தினசரி 20 மணி நேரம் ஆபிஸில் இருக்கிறேன்.. வீட்டில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் கூட வீட்டில் தலைகாட்டுவதற்கும் குளித்து உடைமாற்றிவிட்டு வருவதற்குமே சரியாக போய்விடுகிறது. உண்மை காரணம் இதுதான்” என கூறியிருந்தார் ராஜ்குந்த்ரா. ஒருவேளை அவர் குறிப்பிட்ட அந்த இருபது மணி நேர ஆபீஸ் ஒர்க் இதுவாகத்தான் இருந்திருக்குமோ என்னவோ ?