'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கனவே கார் விபத்து வழக்கு, மான்கறி வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தநிலையில் மோசடி வழக்கு ஒன்றிற்காக சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஷயம் இதுதான்.. சல்மான்கான் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு, இந்த அறக்கட்டளையை சேர்ந்த இருவர் அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கிளை ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும் அதை சல்மான்கான் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி சல்மான்கான் வந்து கடையை திறந்து வைக்கவில்லை, அதனால் எனக்கு நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அருண் குப்தா.