இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இந்த கொரோனா தாக்கத்தாலும் ஊரடங்காலும் கடந்த ஒரு வருட காலாத்திற்கும் மேலாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து, பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாகவே மாறிவிட்ட சோனு சூட், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, 18வயதான தனது மூத்த மகன் இஷானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
ஒருபக்கம் மக்களின் உதவிகளுக்காக பணம் செலவிடும் சோனு சூட், இந்த சமயத்தில் இப்படி ஆடம்பரமாக செலவிடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவிலும் இது எதிரொலித்தது. சோனு சூட்டின் கவனத்துக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனு சூட், “அந்த விலை உயர்ந்த காரை நான் என் மகனுக்காக வாங்கவில்லை. சொல்லப்போனால் அந்த கார், சும்மா ட்ரையல் பாருங்களேன் என கூறி என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவ்வளவுதான்.” என கூறி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், “தந்தையர் தினத்திற்கு நான் ஏன், என் மகனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.? அவன் அல்லவா எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்” என .நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்..