கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரிலீசுக்கு தயாராக காத்திருக்கும் படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லால் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட, பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வரலாற்று படம் சமீபத்தில் கடந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த விருதை ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் இயக்குனர் டேவிட் லீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய பிரேம்களை எப்படி வைக்க வேண்டும் என, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அதனாலேயே அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.