சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரிலீசுக்கு தயாராக காத்திருக்கும் படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லால் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட, பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வரலாற்று படம் சமீபத்தில் கடந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த விருதை ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் இயக்குனர் டேவிட் லீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய பிரேம்களை எப்படி வைக்க வேண்டும் என, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அதனாலேயே அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.