'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். மக்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாகவும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஊரடங்கு காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் மனநலத்தை பராமரிக்கும் வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான், அகஸ்து பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த இக்கட்டான காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவே இந்த முயற்சி. இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பவுண்டேஷன் உதவும். இது என்னுடைய முதல் முயற்சி. மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதல் நோக்கம் என்கிறார்.