புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். மக்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாகவும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஊரடங்கு காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் மனநலத்தை பராமரிக்கும் வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான், அகஸ்து பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த இக்கட்டான காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவே இந்த முயற்சி. இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பவுண்டேஷன் உதவும். இது என்னுடைய முதல் முயற்சி. மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதல் நோக்கம் என்கிறார்.