துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மிஷன் மஜ்னு, குட்பை ஆகிய படங்கள் மூலம் ஹிந்தி சினிமாவில் காலூன்றியிருக்கும் ராஷ்மிகா மந்தனா, இன்னொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று நினைக்கும் ராஷ்மிகா தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தி பயின்று வருகிறார். அடுத்து தான் நடிக்கப்போகும் புதிய ஹிந்தி படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேச வேண்டும் என்கிற நோக்கத்தில் ஹிந்தி பயில்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் மும்பையில் அவர் குடியேறப்போவதில்லையாம். எப்போதுமே எனது தலைமையிடம் ஐதராபாத் தான் என்று கூறும் ராஷ்மிகா, எத்தனை மொழிகளில் நடித்து பிரபலமானாலும் என்னை சினிமாவில் வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவை ஒருநாளும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, சர்வானந்துடன் ஆதவல்லு மீகுஜோஹர்லு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.