மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான திரிஷ்யம் 2 வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இந்த படம் ரீமேக்காகி வருகிறது கன்னடத்தில் இந்த படத்தின் ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்தியிலும் இதன் ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜய் தேவ்கன், ஸ்ரேயாவை வைத்து முதல் பாகத்தை தயாரித்த இந்த நிறுவன தயாரிப்பாளர் குமார் மங்கள் பதக். அந்தப்படத்தை வயாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை தான் மட்டுமே தனியாக தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து வயாகாம் 18 நிறுவனம் நாங்கள் இல்லாமல் இந்தப்படத்தை அவரால் தனியாக தயாரிக்க முடியாது, எங்களுக்கும் இதில் காப்பிரைட் உரிமை உண்டு என பிரச்சனையை கிளப்பி தற்போது அந்த பிரச்சனை மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நாங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்கப் போவதில்லை என்று குமார் மங்கள் பதக் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.