மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான திரிஷ்யம் 2 வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இந்த படம் ரீமேக்காகி வருகிறது கன்னடத்தில் இந்த படத்தின் ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்தியிலும் இதன் ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜய் தேவ்கன், ஸ்ரேயாவை வைத்து முதல் பாகத்தை தயாரித்த இந்த நிறுவன தயாரிப்பாளர் குமார் மங்கள் பதக். அந்தப்படத்தை வயாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை தான் மட்டுமே தனியாக தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து வயாகாம் 18 நிறுவனம் நாங்கள் இல்லாமல் இந்தப்படத்தை அவரால் தனியாக தயாரிக்க முடியாது, எங்களுக்கும் இதில் காப்பிரைட் உரிமை உண்டு என பிரச்சனையை கிளப்பி தற்போது அந்த பிரச்சனை மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நாங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்கப் போவதில்லை என்று குமார் மங்கள் பதக் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.