பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான திரிஷ்யம் 2 வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இந்த படம் ரீமேக்காகி வருகிறது கன்னடத்தில் இந்த படத்தின் ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்தியிலும் இதன் ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜய் தேவ்கன், ஸ்ரேயாவை வைத்து முதல் பாகத்தை தயாரித்த இந்த நிறுவன தயாரிப்பாளர் குமார் மங்கள் பதக். அந்தப்படத்தை வயாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை தான் மட்டுமே தனியாக தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து வயாகாம் 18 நிறுவனம் நாங்கள் இல்லாமல் இந்தப்படத்தை அவரால் தனியாக தயாரிக்க முடியாது, எங்களுக்கும் இதில் காப்பிரைட் உரிமை உண்டு என பிரச்சனையை கிளப்பி தற்போது அந்த பிரச்சனை மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நாங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்கப் போவதில்லை என்று குமார் மங்கள் பதக் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.