மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா முதல் அலை வீசும்போது நடிகர்கள் பணமாக நிதி கொடுத்தபோதும் களத்தில் இறங்கி பல நடிகைகள் பணியாற்றினர். அதேபோன்று இப்போது இரண்டாவது அலையிலும் நடிகைகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கொரோனா 2வது அலை காலத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் மற்றும் ரோடி வங்கியும் இணைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நேரடியாகவே உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் நடிகை பிரணிதி பணியை தொடங்கி விட்டார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கி விட்டார். தினமும் 600 பேருக்கு உணவளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சஞ்சனா கல்ராணி போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.