கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கொரோனா முதல் அலை வீசும்போது நடிகர்கள் பணமாக நிதி கொடுத்தபோதும் களத்தில் இறங்கி பல நடிகைகள் பணியாற்றினர். அதேபோன்று இப்போது இரண்டாவது அலையிலும் நடிகைகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கொரோனா 2வது அலை காலத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் மற்றும் ரோடி வங்கியும் இணைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நேரடியாகவே உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் நடிகை பிரணிதி பணியை தொடங்கி விட்டார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கி விட்டார். தினமும் 600 பேருக்கு உணவளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சஞ்சனா கல்ராணி போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.