எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, அவரது கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி சேகரிக்க கேட்டோ என்ற அமைப்பை துவக்கி நேற்று வீடியோ மூலம் நிதி திரட்ட அழைப்பு ஒன்றை வெளியிட்டனர். ரூ.7 கோடி நிதி திரட்ட எண்ணியுள்ள அவர்கள் தங்கள் சார்பில் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளனர்.
வீடியோவில் அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாவது அலையில் நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. நமது மருத்துவப் பாதுகாப்பு முறை கடும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதிப்படையவது எனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அதனால், நானும் விராட்டும் '#InThisTogether' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து கொரோனா நிவாரண நிதியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிலைமையிலிருந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வெளியே வருவோம். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உதவி செய்ய முன்வாருங்கள். இந்த மோசமான சூழலில் உங்களது உதவி பலரது உயிரைக் காப்பாற்றும்,” என அனுஷ்கா சர்மா, விராட் கோலி நேற்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.