இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, அவரது கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி சேகரிக்க கேட்டோ என்ற அமைப்பை துவக்கி நேற்று வீடியோ மூலம் நிதி திரட்ட அழைப்பு ஒன்றை வெளியிட்டனர். ரூ.7 கோடி நிதி திரட்ட எண்ணியுள்ள அவர்கள் தங்கள் சார்பில் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளனர்.
வீடியோவில் அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாவது அலையில் நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. நமது மருத்துவப் பாதுகாப்பு முறை கடும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதிப்படையவது எனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அதனால், நானும் விராட்டும் '#InThisTogether' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து கொரோனா நிவாரண நிதியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிலைமையிலிருந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வெளியே வருவோம். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உதவி செய்ய முன்வாருங்கள். இந்த மோசமான சூழலில் உங்களது உதவி பலரது உயிரைக் காப்பாற்றும்,” என அனுஷ்கா சர்மா, விராட் கோலி நேற்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.