கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு |
சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தன்னை மாற்றி கொண்ட சுனில் ஷெட்டி, தர்பார், பயில்வான், விரைவில் வெளியாக இருக்கும் 'மரைக்கார்' என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவரது மகன் ஆஹான் ஷெட்டியும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனரான சாஜித் நடியத்வாலா டைரக்சனில் உருவாகும் 'தடாப்' என்கிற படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் செப்-24ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதுடன் ஆஹான் ஷெட்டியின் அறிமுகம் குறித்த தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அக்சய் குமார். மேலும் அவர் ஆஹான் ஷெட்டி பற்றி கூறும்போது, “உன்னுடைய தந்தை அறிமுகமான 'பயில்வான்' படத்தின் போஸ்டரில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். இப்போது நீ ஹீரோவாக அறிமுகமாகும் போஸ்டரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அக்சய் குமாரும் சுனில் ஷெட்டியும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் ஒரே சமயத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..