பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த 2019ல் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் அதன்பின்னர் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படங்களின் படப்பிடிப்புகள் தவிர, 2017ல் கேரளாவில் மொபைல்போன் ஷோரூம் திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வந்தபோது கொச்சி நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவரை காண்பதற்கு கூட்டம் கூடியது.
ஆனால் தற்போது அதே கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு எந்தவித பரபரப்புமின்றி வருகை தந்திருக்கிறார் சன்னி லியோன்.. இந்தமுறை அவர் வந்ததுள்ளது தனியார் ரிசார்ட் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காகவும் அப்படியே கேரளாவை சுற்றி பார்ப்பதற்காகவும் தான். அந்தவகையில் தனது குடும்பத்துடன் வந்துள்ள சன்னி லியோன் தற்போது, கொரோனா பரிசோதனை நடவடிக்கையாக, ஒரு வார காலத்திற்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம் சன்னி லியோன்..