இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ரிச்சா சட்டா. அதன் பிறகு மசான், சர்பிஜித், வோர்ட்ஸ் வித் காட், 3 ஸ்டோரிஸ், கப்ராட், பங்கா உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் பயோபிக் படத்தில் நடித்தார்.
இவர் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் படம் மேடம் சீப் மினிஸ்டர். சுபாஷ் கபூர் இயக்கி உள்ள இந்த படத்தில் ரிச்சா சட்டாவுடன் மனவ் கவ்ல், அக்ஷய் ஓபராய், நிகில் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறர்கள். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நாளை படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்வதாகவும், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாவும் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரியானா மாநில பீம் சேனா அமைப்பின் கைதல் மாவட்ட தலைவர் அசோக் தானியாக என்பவர் டிரம்ப் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ரிச்சா சட்டா, படத்தின் இயக்குனர், மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.