படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். மனதில்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் பேசக்கூடியவர். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்திப்பார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா வெளியிட்ட சில கருத்துக்கள் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் அவர் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தார். அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கங்கனா ரணவத்திடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.