லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். மனதில்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் பேசக்கூடியவர். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்திப்பார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா வெளியிட்ட சில கருத்துக்கள் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் அவர் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தார். அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கங்கனா ரணவத்திடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.