'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
கடந்த 2020 ஜூன் மாதம் பாலிவுட் இளம் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கு காரணம் அவரது காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் என்று சுஷாந்தின் தந்தை கே கே சிங் பீகார் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. இதில் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சில மாதம் சிறைவாசம் அனுபவித்து அது பின் ஜாமினில் வெளி வந்தார்.
இந்த வழக்கு விசாரணை துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் முடிந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த முழு விசாரணையையும் முடித்துள்ள சிபிஐ இது குறித்த விபரங்களை சிறப்பு நீதிமன்றம் வசம் ஒப்படைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்பு தான் இந்த வழக்கில் இந்த விசாரணையே போதுமானதா, அல்லது மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமா என்பது குறித்த புதிய விபரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில் ரியா சக்கரபோர்த்தியின் வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணையை பல கோணங்களில் ஆராய்ந்து தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ள சிபிஐக்கு தன்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.