ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

லக்னோ: கங்குவா பட நடிகையான திஷா பதானியின் தந்தையிடம், அரசுத் துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படமாகும்.
திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஆவார். இவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், தங்களுக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால், அரசு அமைக்கும் ஆணையங்களின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஜெகதீஷ் சிங் பதானி ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.20 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்கிலும் அனுப்பியுள்ளார். 3 மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், ஷிவேந்த்ரா பிரதாப் சிங், திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.