சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் |
லக்னோ: கங்குவா பட நடிகையான திஷா பதானியின் தந்தையிடம், அரசுத் துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படமாகும்.
திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஆவார். இவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், தங்களுக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால், அரசு அமைக்கும் ஆணையங்களின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஜெகதீஷ் சிங் பதானி ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.20 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்கிலும் அனுப்பியுள்ளார். 3 மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், ஷிவேந்த்ரா பிரதாப் சிங், திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.