விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
லக்னோ: கங்குவா பட நடிகையான திஷா பதானியின் தந்தையிடம், அரசுத் துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படமாகும்.
திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஆவார். இவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், தங்களுக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால், அரசு அமைக்கும் ஆணையங்களின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஜெகதீஷ் சிங் பதானி ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.20 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்கிலும் அனுப்பியுள்ளார். 3 மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், ஷிவேந்த்ரா பிரதாப் சிங், திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.