பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஹிந்தியில் இந்த தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛பூல் புலையா 3'. அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யாபாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
வித்யாபாலன் கூறுகையில், ‛‛அனீஸ் பாஸ்மி உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அற்புதமான மனிதர். பார்வையாளர்களின் பல்சை நன்கு அறிந்தவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கதை சொல்லி மற்றும் இயக்குனர். அவரின் காட்சி அமைக்கும் விதத்தை வைத்து நிறைய கற்றுக் கொண்டேன். மாதுரி தீட்சித் மிகவும் அன்பான மற்றும் அருமையான நபர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் நடனமாடியதை எனக்கு கிடைத்த பெருமையாக உணர்கிறேன். அவருடன் நடனமாட வேண்டும் என்ற கனவு இருந்தது, இப்போது அது உண்மையாகிவிட்டது" என்றார்.