அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
துணிச்சலான பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆளும் பிஜேபி கட்சியில் உள்ள அவர் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாக ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் விஷாக் நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான புட்டேஜ் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தனக்கு சில நபர்களிடம் இருந்து போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியுள்ளார் விஷாக் நாயர்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் சில நான் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் என் மீது வெறுப்பை காட்டுவதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி முதலில் விசாரியுங்கள்” என்று தனது சோசியல் மீடியா பதிவு மூலமாக கூறியுள்ளார்.