அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பழம்பெரும் ஹிந்தி பாடகர் சுரேஷ் வாட்கர் தனது பிறந்தநாளை மும்பையில் பத்திரிக்கையாளர்களுடன் பிரமாண்டமாக கொண்டாடினார். அதோடு புதிய வானொலி நிகழ்ச்சியான “ஏ ஜிந்தகி கேல் லகா லே” அறிமுகமும் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுரேஷ் வாட்கரின் மனைவி பத்மா வாட்கரும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் தனது இனிமையான குரலில் "சத்மா" திரைப்படத்தின் "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற எவர்கிரீன் பாடலை பற்றி பேசினார். மேலும் அந்த பாடலின் உருவாக்கம், பதிவும் பற்றியும் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் முதன்முறையாக ரேடியோ நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் கலந்து கொள்கிறார். இந்த புதிய பயணத்தால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
தீபாவளி வரை ஒளிபரப்பாகும் இந்த வானொலி நிகழ்ச்சி ஒரு இசைப் பயணமாக இருக்கும். அதில் சுரேஷ் வாட்கர் தனது நினைவுகளிலிருந்து கேட்காத சில கதைகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். அதாவது அவரின் வாழ்க்கை பயணம், சினிமாவில் பாடகராக வளர்ந்தது, பாடல்களின் பதிவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்கிறார்.
1955ல் ஆக., 7ல் பிறந்த சுரேஷ் வாட்கர் ஹிந்தி சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் பாடல்களைப் பாடியுள்ளார். "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற வானொலி நிகழ்ச்சிக்காக அவரது ரசிகர்களும், இசை ஆர்வலர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.