300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவருக்கும், மனைவி ஆலியா என்பவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என ஒன்றாக இணைந்தனர். இந்தநிலையில் நவாசுதீன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும். திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.
நவாசுதீனின் இந்த கருத்தால், மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்னை வெடித்ததாக தகவல் பரவுகிறது.