மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக். 25 மொழிகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் சில பாடல்களை பாடி உள்ளார். ஏக் தோ தீன்', 'சோலி கே பீச்சே கியாஹே' பாடல்கள் மூலம் உலக புகழ் பெற்றார். இந்த நிலையில் 58 வயதான அல்கா தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தியதால் தனது செவித்திறன் திடீரென பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கும்போது, எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர், வைரஸ் தாக்குதலால் உணர்திறன் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் செவித்திறன் இழப்புஏற்பட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை எடுத்து வருகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.