ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
மும்பை : பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர், 2021ம் ஆண்டு ஆபாச படங்களை தயாரித்து, அதை மொபைல் செயலிகளில் பதிவேற்றியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்; பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஷில்பாவும், கணவர் குந்த்ராவும் மீண்டும் மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர். தங்க திட்டம் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் தன்னிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மற்றும் அவரது கணவர் மீது, மும்பை வர்த்தகர் பிரித்விராஜ் சரேமல் கோத்தாரி என்பவர் மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: 'சத்யுக் கோல்ட்' என்ற பெயரில் ஷில்பாவும், குந்த்ராவும் இணைந்து தங்க திட்டத்தை துவங்கினர். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு லாபகரமான தங்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி என்னை சேர்த்தனர். இதை நம்பி, அவர்களது தங்க திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தேன். முதிர்வு காலம் 2019 ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், நான் செய்த முதலீட்டுக்கான தங்கத்தை தராமல் ஏமாற்றினர். எனவே, கோர்ட் தகுந்த நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவுடன் ஷில்பா ஷெட்டி கையெழுத்திட்ட தங்க திட்டம் தொடர்பான கடிதம் மற்றும் சத்யுக் கோல்ட் பிரைவேட் நிறுவனம் வழங்கிய விலைப் பட்டியலையும் கோர்ட்டில் கோத்தாரி தாக்கல் செய்தார்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.