லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன் இந்தப் படத்தை அவரே இயக்கியும் உள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க தான் ஆவலாக இருப்பதாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
பாலிவுட் செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு கங்கனாவுக்கும் கரண் ஜோஹருக்கும் இடையேயான பல வருட மோதல் குறித்து நன்றாகவே தெரியும். குறிப்பாக நெப்போட்டிசத்தை வளர்த்து விடுபவர் என்கிற ரீதியில் தொடர்ந்து கரண் ஜோஹர் மீது விமர்சனங்களை அடுக்கி வருபவர் தான் கங்கனா. இந்த நிலையில் தனது படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருப்பதாக கூறியதற்கு தனக்கே உரிய நக்கலான பாணியில் பதிலளித்துள்ளார் கங்கனா.
இது குறித்து அவர் கூறும்போது, “ஏற்கனவே எனது இயக்கத்தில் மணிகர்ணிகா படம் வெளியானபோது இதே போல் தான் கூறினார் கரண் ஜோஹர். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் சேர்ந்து படத்தை சகட்டுமேனிக்கு விமர்சித்து நன்றாக ஓட வேண்டிய படத்தை அந்த வார இறுதியிலேயே சரிவுக்கு தள்ளி சந்தோஷப்பட்டார்கள். இப்போது எமர்ஜென்சி படத்தையும் பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் நான் பயந்துவிட்டேன்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.