'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிரபல பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல். 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்ரி, நரமிம்மடு, பரம் வீர் சக்ரா, அகத்தியர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்தார். தற்போது மிஸ்ட்ரி ஆப் டாட்டூ, கதார் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்து கொண்டார்.
அமிஷா தனது நண்பர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து 3 கோடிக்கு அமிஷா செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமிஷா பட்டேலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அவர் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.