மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார். கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் அதிக சம்பளம் பெறுவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை மற்றும் அவரது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.
தனது மாமியார் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அது குறித்து அவர் கூறியதாவது: "கடந்த 2000ம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு குறித்து என்னிடம் பேசிய என் மாமியார், “நீ வென்றபோது உன்னை நாங்கள் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் போது டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். அந்த நிகழ்ச்சியை காண என்னுடன் நிக் ஜோனாசும் சேர்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், அவனுக்கு 8 வயது தான் இருக்கும்" என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.