பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார். கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் அதிக சம்பளம் பெறுவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை மற்றும் அவரது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.
தனது மாமியார் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அது குறித்து அவர் கூறியதாவது: "கடந்த 2000ம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு குறித்து என்னிடம் பேசிய என் மாமியார், “நீ வென்றபோது உன்னை நாங்கள் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் போது டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். அந்த நிகழ்ச்சியை காண என்னுடன் நிக் ஜோனாசும் சேர்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், அவனுக்கு 8 வயது தான் இருக்கும்" என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.