சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சல்மான்கானுக்கு ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் பூஜா ஹெக்டே.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சல்மான்கானை 'பாய்' என்று மரியாதையாக அழைத்ததால் நானும் பாய் என்றே அவரை அழைத்தேன். ஆனால் சல்மான்கான் அப்படி அழைக்க வேண்டாம் என என்னிடம் கூறியதுடன் சல்மான் என்று தன் பெயரை சொல்லியே அழைக்கும்படி கூறினார். ஆனாலும் அது மரியாதையாக இருக்காது என்பதுடன் என்னால் அப்படி கூப்பிடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் எனக்கும் அவருக்கும் சங்கடம் வராத வகையில் அவரது பெயரை சுருக்கி எஸ்.கே என அவரை அழைக்க ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.