ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்த 24 வயதான பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 1ம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இருந்த நிலையில் இன்று (நவ.,20) அவர் உயிரிழந்தார்.
துவக்கத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமான ஜந்த்ரிலா சர்மா, தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.