பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, தேசப்பற்று மிக்க நடிகையும்கூட. அடிக்கடி அவர் கூறும் சமூக மற்றும் அரசியல் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய சக்தியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி, கங்கனாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முன்வந்தபோது அதனை கங்கனா மறுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் மூலம் பார்லிமென்ட் செல்லவே விரும்புவதாக கூறுகிறார்கள்.




