எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்த படம் நாளை செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் பிரார்த்தனை செய்வதற்காக ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் உஜ்ஜயினில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த தகவலை ஆலியா பட முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அங்கே கூடிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்..
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கூட ரன்பீர் கபூரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திரும்பினர். அதேசமயம் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் கூட, படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மஹாகாளேஸ்வரர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..