லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்த படம் நாளை செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் பிரார்த்தனை செய்வதற்காக ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் உஜ்ஜயினில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த தகவலை ஆலியா பட முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அங்கே கூடிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்..
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கூட ரன்பீர் கபூரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திரும்பினர். அதேசமயம் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் கூட, படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மஹாகாளேஸ்வரர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..