கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி, அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஆகியோர் மும்பை அருகில் அலிபாக் என்ற இடத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பார்ம் ஹவுஸ் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்களாம்.
ஆறு மாதங்களுக்கு முன்பாக அந்த இடத்தை விராட்டும், அனுஷ்காவும் நேரில் சென்று பார்த்துள்ளனர். விராட் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அதனால், அவரது சகோதரர் விகாஸ் கோலி பதிவுத்துறை வேலைகளைப் பார்த்து வருகிறாராம்.
மகாராஷ்டிர மாநிலம், ரைகாட் மாவட்டத்தில், அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் சுமார் 3350 சதுர மீட்டரில் அந்த பார்ம் அவுஸ் உள்ளதாம். இரண்டு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 1ம் தேதி அந்த இடத்திற்கான பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
விராட் ஏற்கெனவே மும்பை, ஜுஹு பகுதியில் பாலிவுட் பாடகர், நடிகர் கிஷோர் குமார் குடும்பத்திற்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ளாராம். கோல்கட்டா, புனே, டில்லி ஆகிய இடங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய 'ஒன் 8 கம்யூன்' ரெஸ்ட்டாரன்டை விரைவில் ஆரம்பிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.