2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே உடன் இணைந்து அவர் நடித்த பஜ்ரவ் மஸ்தானி என்ற படமும், 2019ம் ஆண்டு நடித்த கல்லி பாய் என்ற படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தீபிகாவை திருமணம் செய்துள்ள இவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதிர்ச்சி தந்துள்ளார் ரன்வீர் சிங். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரன்வீர் கூறுகையில், 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர்.