பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். அவர் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் நான்கு மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை 119 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுக்கு மாடி குடியிருப்பில் 16, 17, 18, 19 ஆகிய தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாம். மொத்தம் 11,266 சதுர அடி வீடு. மாடிப் பகுதி மட்டும் 1300 அடி. 19 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது. அதற்காக பத்திரப் பதிவுக் கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாயாம்.
ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரது வீட்டிற்கருகில்தான் ரன்வீர் சிங் வாங்கியுள்ள 'சாகர் ரேஷம்' என்ற இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறதாம். தங்களது ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் ரன்வீர் சிங்கும், அவரது அப்பாவும் இந்த குடியிருப்பை புக் செய்துள்ளார்களாம்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ள ரன்வீர் சிங் தற்போது 'சர்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படங்களில் நடித்து வருகிறார்.




