300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஹிந்தியில் சல்மான்கான் நடித்த நோ என்ட்ரி படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று சல்மான்கான் விரும்புவதாகவும் அதனால் அவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனீஸ் பாஸ்மே இயக்கும் இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பர்தீன் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ஹிந்தியில் உள்ள ஸ்டார் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோயின்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தில் சமந்தா மற்றும் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.