துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த வருடம் திடீரென திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் திருமணம் முடித்த கையோடு மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார் யாமி கவுதம். அந்தவகையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அவர் நடித்துள்ள தேஸ்வி என்கிற படம் வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிறைக்கைதிகளை மையப்படுத்தி சென்ட்ரல் ஜெயிலை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயில் அதிகாரியாக யாமி கவுதம் நடித்துள்ளார். அதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தப்படத்தை ஆக்ராவில் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். மேலும் அவர்களுடன் யாமி கவுதம், அபிஷேக் பச்சன், படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான நிம்ரத் கவுர் ஆகியோரும் இணைந்து படம் பார்த்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.