புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு மிஸ்ஸ்ரீலங்கா பட்டம் வென்றதும் மாடலிங் துறையில் முன்னணிக்கு வந்தார். அதன்பிறகு பாலிவுட் நடிகை ஆனார். மர்டர் 2, ரேஸ் 2, ஹவுஸ்புல் 3, கிக், ராய், சாஹோ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது விக்ராந்த் ராணா, கிர்குஸ், ராம்சேட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இலங்கையில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, மக்கள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : ‛‛எனது நாட்டு மக்களை பார்க்கும்போது மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை குடிமகளாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் நாட்டுக்காக, மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும். அதனால் நிறைய பலன் கிடைக்கும்'' என்கிறார்.