பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை கதை களமாக கொண்டு உருவாகியுள்ள படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை பிரதமர் முதல் பல தலைவர்கள் பாராட்டி உள்ளார்கள். பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளது. 19 கோடியில் தயாரான படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆனால் சில அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஆமீர்கான் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. என்று பேசினார்.