மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் |
மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது.
வருகிற 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், கங்குபாயின் வளர்ப்பு மகன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தி உள்ளார். மும்பை ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்கள் அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதோடு மும்பை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு தடைகேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பதிலில் "ஹுசைன் ஜைதி என்பவர் எழுதிய மாபியா குயின் ஆப் மும்பை என்ற நூலை தழுவி, கங்குபாய் குடும்பத்தினரின் எழுத்துபூர்வமான அனுமதியை பெற்றே படம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.