பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது.
வருகிற 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், கங்குபாயின் வளர்ப்பு மகன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தி உள்ளார். மும்பை ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்கள் அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதோடு மும்பை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு தடைகேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பதிலில் "ஹுசைன் ஜைதி என்பவர் எழுதிய மாபியா குயின் ஆப் மும்பை என்ற நூலை தழுவி, கங்குபாய் குடும்பத்தினரின் எழுத்துபூர்வமான அனுமதியை பெற்றே படம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.