புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் மீது ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடத்தில் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் தந்தை, பர்கத் அம்ரா என்பவரிடத்தில் 21 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து தந்தை வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி 28ஆம் தேதி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் மற்றும் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளார்.