படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் மீது ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடத்தில் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் தந்தை, பர்கத் அம்ரா என்பவரிடத்தில் 21 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து தந்தை வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி 28ஆம் தேதி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் மற்றும் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளார்.