பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இதில் ஹிந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக், அஜய் தேவ்கன் டைரக்சனில் நடித்து வரும் ரன்வே 34, ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து வரும் டாக்டர் ஜி மற்றும் மிஷன் சின்ட்ரெல்லா என நான்கு படங்கள் வரும் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகின் நிலைமையே மாறிப்போய் இருந்தது.. தற்போது மீண்டும் வழக்கமான இயக்கத்திற்கு வந்துள்ளது. எனது நான்கு படங்கள் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்” என்றார்.