ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 28 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இதில் ஹிந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக், அஜய் தேவ்கன் டைரக்சனில் நடித்து வரும் ரன்வே 34, ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து வரும் டாக்டர் ஜி மற்றும் மிஷன் சின்ட்ரெல்லா என நான்கு படங்கள் வரும் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகின் நிலைமையே மாறிப்போய் இருந்தது.. தற்போது மீண்டும் வழக்கமான இயக்கத்திற்கு வந்துள்ளது. எனது நான்கு படங்கள் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்” என்றார்.