ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கொரோனாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் நடிகர், நடிகைகள் விழாக்கள், விருந்துகள், படப்பிடிப்புகள் என எப்போதும் ஒரு கூட்டத்துடனேயே இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை கொரோனா தொற்று எளிதாக தாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கிறது. இதையும் சிலர் மீறிவிடுகிறார்கள்.
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தனிமைப்படுத்துதல் விதியை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, அவர் கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.