துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ஜாக்குலின் மறுத்தார். ஆனால் அவர் சுகேசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அதோடு சுகேஷ் சிறைக்குள் இருந்து கொண்டே 200 கோடி வரை மோசடி செய்த விவகாரத்தில் ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதனால் நேரில் ஆஜராகும்படி ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறை சம்மனும் அனுப்பியது. துபாய் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்தனர். இந்த விசாரணை 8 மணி நேரம் நடந்தது.
பல கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் சொல்ல முடியவில்லை. வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து பதில் சொல்வதாக கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளித்தது.
இதை தொடர்ந்து நேற்றும் அவர் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அப்போது அவர் சுகேஷ் எனது நண்பர்தான். சில கொடுக்கல், வாங்கல்களில் அவருக்கு நான் உதவியது உண்மை. ஆனால் அவை நேர்மையான வரவு, செலவுகள் என்றும், சுகேஷ் நேர்மையானவர் என்று நம்பியும் அதை செய்ததாக அவர் விசாரணையில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறையில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இந்த வழக்கில் ஜாக்குலின் சாட்சி மட்டும்தான், சாட்சிக்குரிய கடமையை அவர் செய்தார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.