பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் அங்கே இருந்த காரணத்தினால் அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பலரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் இன்று காலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். முதலில் இது ரெய்டு என தகவல் வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் இவர் ஷாருக்கானின் சகோதரி சுஹானா கானும் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட ஆர்யன்கானுடன் இதுகுறித்து சாட்டிங் செய்து இருந்ததால் அவரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.