கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் அங்கே இருந்த காரணத்தினால் அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பலரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் இன்று காலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். முதலில் இது ரெய்டு என தகவல் வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் இவர் ஷாருக்கானின் சகோதரி சுஹானா கானும் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட ஆர்யன்கானுடன் இதுகுறித்து சாட்டிங் செய்து இருந்ததால் அவரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.