நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் அங்கே இருந்த காரணத்தினால் அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பலரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் இன்று காலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். முதலில் இது ரெய்டு என தகவல் வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் இவர் ஷாருக்கானின் சகோதரி சுஹானா கானும் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட ஆர்யன்கானுடன் இதுகுறித்து சாட்டிங் செய்து இருந்ததால் அவரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.