தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனலெட்சுமி. இவர் கல்லூரி படிக்கும் காலக்கட்டத்திலேயே சிவா என்பவரை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்த இவரது காதல் கதை சென்ற வருடம் தான் கல்யாணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி உற்றார் உறவினர் சூழ கோலாகலமாக நடந்தேறியது.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவர்களது திருமண நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் வீடியோவையும் தனலெட்சுமி தனது இன்ஸ்டாவில் தற்போது ஷேர் செய்துள்ளார். அதில், 'இந்த பத்து வருட காதல் மற்றும் ஒரு வருட திருமண வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்த அன்பானவருக்கு நான் சொல்வது உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிக்கு பலரும் தற்போது திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.