‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவிற்குள் நுழைவது மிகவும் எளிதாகிவிட்டது. அதிலும் சீரியல் ஹீரோயின்களாக மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளுக்கு சினிமாவில் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. வாணி போஜன், ப்ரியா பவாணி சங்கர், தர்ஷா குப்தா என பலரும் சீரியல்களில் நடித்து அதன் பின் சினிமாவில் கதாநாயகிகளாக உலா வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ரேயா அஞ்சனும் தற்போது இணைந்துள்ளார். கலர்ஸ் தமிழின் திருமணம் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா அஞ்சன். தொடர்ந்து சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகவும் உள்ளார். தமிழில் சில குறும்படங்களிலும், கன்னட மொழி படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்த ஸ்ரேயா அஞ்சன் தற்போது 'ஐந்து உணர்வுகள்' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். எழுத்தாள ஆர்.சூடாமணி எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரேயாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.