ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

யாரடி நீ மோகினி சீரியலின் 2-வது க்ளைமாக்ஸை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பபோவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஹிட் அடித்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக தொடரின் க்ளைமாக்ஸை ரசிகரக்ளிடம் ஒப்படைத்திருந்த சீரியல் குழு சென்ற வார ஞாயிறு அன்று க்ளைமாக்ஸை ஒளிபரப்பியது. சீரியல் முடிவடைந்ததையொட்டி அதில் நடித்த நடிகர்களும் மிகவும் எமோஷ்னலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், யாரடி நீ மோகினி சீரியலுக்கு மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக சீரியல் குழு அறிவித்து புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ஒரே சீரியலுக்கு இரண்டு க்ளைமாக்ஸ் வைத்திருப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியலின் இரண்டாவது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.