விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

யாரடி நீ  மோகினி சீரியலின் 2-வது க்ளைமாக்ஸை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பபோவதாக  ஜீ தமிழ் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஹிட் அடித்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக தொடரின் க்ளைமாக்ஸை ரசிகரக்ளிடம் ஒப்படைத்திருந்த சீரியல் குழு சென்ற வார ஞாயிறு அன்று க்ளைமாக்ஸை ஒளிபரப்பியது. சீரியல் முடிவடைந்ததையொட்டி அதில் நடித்த நடிகர்களும் மிகவும் எமோஷ்னலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், யாரடி நீ மோகினி சீரியலுக்கு மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக சீரியல் குழு அறிவித்து புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ஒரே சீரியலுக்கு இரண்டு க்ளைமாக்ஸ் வைத்திருப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியலின் இரண்டாவது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.