பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள புதிய சீரியலில் நீச்சல் வீராங்கனை ஜனனி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் நேயர்களின் ஆதரவையும் கேட்டுள்ளார்.
நடிகர் நடிகைகளுக்கு வெள்ளித்திரையை விட அதிக புகழ் தரும் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது சின்னத்திரை. இன்னொருபுறம் தொலைக்காட்சிகளும் டி ஆர் பி போட்டியில் சீரியல்களை எடுத்து குவித்து வருகின்றனர். இதனால் நடிக்கும் ஆர்வமுள்ள பலருக்கும் திரையில் தோன்றும் வாய்ப்பை சின்னத்திரை எளிமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது நடிகையாக அறிமுகமாகிறார் ஜனனி பிரபு.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்ற ஜனனி ஒரு நீச்சல் வீராங்கனையும் கூட. மாடலிங் துறையில் சீரியஸாக முயற்சி செய்து கொண்டே நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனனி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த தொடரில் நளினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி நடிக்கவுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடரின் மெகா லாஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் ஜி தமிழ் ஸ்டுடியோவில் நடந்தது. அதன் புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஜனனி, நடிகையாக களமிறங்கும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.