லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இன்றைய தேதியில் சின்னத்திரையுலகின் செல்லக் குழந்தை ஷிவாங்கி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வந்தவர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துருதுருவென வலம் வந்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். அவரது குழந்தை முகமும், சின்ன சின்ன சேட்டைகளும் டி.வி.ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவாங்கி சிறு வயதில் தன் குரலை எல்லோரும் கேலி செய்தார்கள் என்றும் தன்னை ஒரு மாதிரியான பெண் என்று விமர்சனம் செய்தார்கள் என்றும், அவமானத்தால் துடித்தேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதேசமயம் இப்போது தன்னை தங்களது வீட்டில் உள்ள பிள்ளை போல் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ஷிவாங்கி, அடுத்து விஜய், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.