மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கேரளாவை சேர்ந்த அணிலா ஸ்ரீகுமார் தமிழில் முதன்முதலில் நடிக்க வரும்போது பலரும் நெகட்டிவாக பேசியிருந்தார்களாம். ஆனால், அதையெல்லாம் தகர்த்து அணிலாவின் நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியிலும் ஒரு சீரியல் நடித்து வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் பேசிய அணிலா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனது ஏக்கத்தை சொல்லியிருந்தார். மேலும், மாதத்திற்கு 30 நாட்கள் தான் இன்னும் 10 நாட்கள் இருந்தால் இன்னொரு சீரியல் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறும் வகையில் புதிய சீரியலில் அதுவும் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் 'பவித்ரம்' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது ஆசைப்படியே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அணிலா நடிகையாகிவிட்டார். அதேசமயம் இந்த மூன்று சீரியல்களில் ஏதாவது ஒன்றிலிருந்து விலகுவீர்களா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டிருந்த நிலையில், கண்டிப்பாக மூன்று சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.