32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி பிரியா விலகுவதாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.